search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகநேரி சிவன்கோவில் சித்திரை திருவிழாவில் ஆலய பணியாளர்கள், மகளிருக்கு பரிசு
    X

    விழாவில் பா.ஜ.க. பிரமுகரான கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் அன்னதானத்தை தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    ஆறுமுகநேரி சிவன்கோவில் சித்திரை திருவிழாவில் ஆலய பணியாளர்கள், மகளிருக்கு பரிசு

    • ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சித்திரை திருவிழா கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடைபெற்றது.
    • பூஜை வைபவங்களை ஆலய பூஜகர் அய்யப்பபட்டர் குழுவினர் நடத்தினர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி ஸ்ரீ சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சித்திரை திருவிழா கணபதி ஹோமத்து டன் தொடங்கி நடைபெற்றது.

    அன்னதானம்

    இதனை தொடர்ந்து வேதபாராயணம், திருமுறை பாராயணம் நடந்தன. பின்னர் திரவிய ஹோமம், வஸ்திராகுதி, பூரணாகுதி, தீபாராதனை ஆகியவை நடந்தன. இதன்பின்னர் சுவாமி, அம்பாளுக்கு 18 வகை திரவியங்களால் மகா அபிஷேகம், அன்னா பிஷேகம், சங்காபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.

    பூஜை வைபவங்களை ஆலய பூஜகர் அய்யப்ப பட்டர் குழுவினர் நடத்தினர். மதியம் 5 ஆயிரம் பேருக்கு அன்ன தானம் நடந்தது. இதனை பா.ஜ.க. பிரமுக ரான ஆறுமுகநேரி கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    பரிசு பொருட்கள்

    கோவிலின் கோசாலை பராமரிப்பு மற்றும் உழவாரப் பணிகளில் ஈடுபட்டு வரும் மகளிரை ஊக்குவிக்கும் வகையில் 12 பேருக்கு தலா ரூ. 1000 மற்றும் புடவை உள் ளிட்ட பரிசு பொருட்களையும் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் வழங்கி னார். இதேபோல் ஆலய அர்ச்சகர்கள் உள்ளிட்ட பணியா ளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சிக்கு 5-வது வார்டு கவுன்சிலர் தமயந்தி, முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவசங்கரி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். இரவில் திருச்செந்தூர் கோவிந்த ம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி பேராசிரியர் ஸ்ரீமதி தியாகராஜன் பக்தி சொற்பொழிவு ஆற்றினார். முடிவில் சுவாமி, அம்பா ளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

    நிகழ்ச்சிகளில் பக்த ஜனசபை நிர்வாகி தெரிசை அய்யப்பன், கீழவீடு பாஸ்கர், எம்.எஸ்.எஸ். கார்த்திகேயன், ெரயில்வே வளர்ச்சி குழு ஒருங்கிணைப்பாளர் தங்கமணி, நகர காங்கிரஸ் தலைவர் ராஜாமணி, அ.தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் அமிர்தராஜ், பா.ஜ.க. இதர பிற்படுத்தப்பட்டோர் அணி தங்கபாண்டி, பேராசிரியர் அசோக்குமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் மணியம் சுப்பையா, மண்டக படித்தாரரும் முன்னாள் விவசாய சங்க தலைவருமான கீழவீடு கே.ஆர். முருகன் ஆகியோர் செய்து இருந்தனர்.

    Next Story
    ×