திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலில் கருடசேவை விழா

புரட்டாசி 3-வது சனிக்கிழமை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கருட சேவையில் கலந்து கொண்ட பக்தர்களை படத்தில் காணலாம்.
கருட சேவையில் கலந்து கொண்ட பக்தர்களை படத்தில் காணலாம்.
Published on

களக்காடு:

திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் திருமலை நம்பி கோவில் உள்ளது.

ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமை களில் கருட சேவை விழா நடப்பது வழக்கம்.

அதன்படி புரட்டாசி 3-வது சனிக்கிழமை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், திருமஞ்சனம், சிறப்பு தீபாராதனை நடந்தது. மதியம் 1 மணிக்கு உச்சி கால பூஜை, அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது.

இதையடுத்து மாலையில் கருட சேவை நடந்தது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களி லிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் குடும்பத்தோடு மலைப் பாதையில் நடந்து கோவிலுக்கு வந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்க ளுக்கு அன்ன தானமும் வழங்கப்பட்டது. திருக்கு றுங்குடி வனச்சரகர் யோகேஷ்வரன் தலைமையில் வனப் பகுதியில் களக்காடு, திருக்குறுங்குடி, மேலகோதை யாறு வனச்சர கங்களை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழி யர்களும், ஏர்வாடி இன்ஸ்பெக்டர் தர்மராஜ் தலைமையில் திருக்குறுங்குடி, ஏர்வாடி, களக்காடு போலீசார் 30-க்கும் மேற்பட்ட போலீசாரும் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com