search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எப்.எக்ஸ். சி.பி.எஸ்.இ. பள்ளியில் விளையாட்டு போட்டி ஆண்டு விழா - போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் பங்கேற்பு
    X

    ஆண்டு விழாவில் ஸ்காட் கல்லூரி கல்வி நிறுவனர் எஸ்.கிளிட்டஸ் பாபு, போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் மற்றும் பலர் உள்ளனர்.

    எப்.எக்ஸ். சி.பி.எஸ்.இ. பள்ளியில் விளையாட்டு போட்டி ஆண்டு விழா - போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் பங்கேற்பு

    • நெல்லை வண்ணார் பேட்டை எப்.எக்ஸ். சி.பி.எஸ்.இ. பள்ளியில் மாணவர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சாதனை படைப்பதற்காக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
    • விளையாட்டு போட்டிக்கான ஒலிம்பிக் ஜோதியை போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் ஏற்றி வைத்தார்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டை எப்.எக்ஸ். சி.பி.எஸ்.இ. பள்ளியில் மாணவர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சாதனை படைப்பதற்காக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆண்டு விழா

    பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதை பள்ளி நிர்வாகம் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. மேலும் நவீன ஆய்வகம் மூலம் அறிவித்திறன் பயிற்சி, தற்காப்பு கலை பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான விளையாட்டு போட்டி ஆண்டு விழா எப்.எக்ஸ். சி.பி.எஸ்.இ. பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஸ்காட் கல்லூரி கல்வி குழும நிறுவனர் எஸ்.கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கினார். ஸ்காட் பள்ளிகளின் தாளாளர் பிரியதர்ஷினி, அருண்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் கலந்து கொண்டார்.

    கலை நிகழ்ச்சி

    விளையாட்டு போட்டிக்கான ஒலிம்பிக் ஜோதியை போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் ஏற்றி வைத்தார். விளையாட்டு போட்டிக்கான கொடியையும் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். அப்போது மாணவர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து மாணவ-மாணவிகளின் கைப்பந்து, கூடைப்பந்து, கபடி, தடகளம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் பரிசு கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் ஆகியவை வழங்கி பாராட்டினார். விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக போதை பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி துணை கமிஷனர் தலைமை யில் மாணவர்களும், பெற்றோர்களும் எடுத்துக் கொண்டனர்.

    விழாவில் பொது மேலாளர் (வளர்ச்சி) ஜெயக்குமார், பொது மேலாளர் (நிர்வாகம்) கிருஷ்ணகுமார், முதல்வர் பத்மினி வள்ளி மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×