search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புலவன்குடியிருப்பு வெள்ளிமலை முருகன் கோவிலில் பவுர்ணமி பூஜை
    X

    விஷேச அலங்காரத்தில் முருகன்

    புலவன்குடியிருப்பு வெள்ளிமலை முருகன் கோவிலில் பவுர்ணமி பூஜை

    • ஸ்ரீ பழனி மலை பாலமுருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா மற்றும் பவுர்ணமி சிறப்பு பூஜை சிறப்பாக நடைபெற்றது
    • பக்தர்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் மதியம் அன்னதானம் நடைபெற்றது.

    ஏர்வாடி:

    களக்காடு- சேரை மார்க்கத்தில் வெள்ளிமலை அடிவாரத்தில் புலவன்குடியிருப்பு அரசன் நகரில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ பழனி மலை பாலமுருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா மற்றும் பவுர்ணமி சிறப்பு பூஜை சிறப்பாக நடைபெற்றது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு முருகபெருமான், வெள்ளிமலை நாதர், காமாட்சி அம்மன், வலம்புரி விநாயகர், பிங்களசேன பைரவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் மதியம் அன்னதானம் நடைபெற்றது.

    இரவு 8 மணிக்கு காமாட்சியம்மன்- வெள்ளிமலை நாதர் சன்னதி முன்பாக சொக்கப்பனை தீபம் வழிபாடு நடைபெற்றது. பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக தீபாராதனை, மற்றும் கோ பூஜையுடன் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சித்தர்கள் வழிபடும் ஆலயமாக பக்தர்கள் கருதுவதால் வேண்டுதல்கள் நிறைவேறுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். இந்த ஆலயத்தை கணேஷ்குமார் சுவாமிகள் நிர்வகித்து வருகிறார்.

    Next Story
    ×