search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் பவுர்ணமி பூஜை
    X

    பவானி அம்மன் ஆலயத்தில் பவுர்ணமி பூஜையில் குருநாதர் சக்தியம்மா தலைமையில் பாலாபிஷேகம் நடந்த போது எடுத்த படம்.

    புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் பவுர்ணமி பூஜை

    • அம்மனுக்கு தேன், சந்தனம், நறுமணப்பொருள்கள் உள்பட 21 வகையான அபிஷேகம் நடந்தது.
    • முப்பெரும்தேவியருக்கு சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரங்கள் செய்து பெரிய தீபாதரனை காண்பிக்கப்பட்டது.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடியில் அருள் வாக்கிற்கு பிரசித்தி பெற்ற முப்பெரும் தேவியர் பவானியம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், பாலநாகம்மன் கோவிலில் மாதந் தோறும் (புரட்டாசி மாதம்) நடை பெறும் சிறப்பு பால் அபிஷேகமும், திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.

    மாலை 6 மணிக்கு புரட்டாசி மாத பவுர்ணமி பூஜையின் சிறப்பு குறித்து கோயில் குருநாதர் சக்தியம்மா ஆன்மீக சொற் பொழிவாற்றினார். 6.30 மணியளவில் முப்பெரும் தேவி அம்மனுக்கு பச்சைஅரிசி மாவு, பன்னீர், மஞ்சள், இளநீர், பழங்கள், திருநீர், தயிர், குங்குமம், தேன், சந்தனம், நறுமணப்பொருள்கள் உள்பட 21 வகையான அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், கொரானோ வைரஸ் முழுவதும் அழிந்து போகவும் சிறப்பு மந்திரங்கள், பிரார்த்தனைகளும் 1008 லிட்டரில் சிறப்பு பால் அபிஷேகமும், குருநாதர் சக்தியம்மா தலைமையில் நடைபெற்றது.

    பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள பால விநாயகர், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பதினெ ட்டாம்படி கருப்பசாமி, செங்காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் பாலபிஷேகம் நடை பெற்றது. அதன் பிறகு முப்பெரும்தேவியருக்கு சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரங்கள் செய்து பெரிய தீபாதரனை காண்பிக்கப்பட்டது. இரவு 8.30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

    இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கில் தீபம் ஏற்றி பாடல்கள் படித்து திருவிளக்கு பூஜை நடந்தது. பவுர்ணமி பூஜையை முன்னிட்டு இரவு சிறப்பு அன்னதானம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×