search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புளியங்குடி பவானி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை
    X

    அம்மனுக்கு அபிஷேகம் நடந்த காட்சி.

    புளியங்குடி பவானி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை

    • புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள முப்பெரும்தேவியர் பவானியம்மன் கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
    • முப்பெரும்தேவியருக்கு சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரங்கள் செய்து பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் அருள் வாக்கிற்கு பிரசித்தி பெற்ற புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள முப்பெரும்தேவியர் பவானியம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், பாலநாகம்மன் கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் சிறப்பு பால் அபிஷேகமும், திருவிளக்கு பூஜையும் சிறப்பாக நடைபெற்றது.

    மாலை 6 மணிக்கு ஆவணி மாதம் பவுர்ணமி பூஜையின் சிறப்பு குறித்து கோவில் குருநாதர் சக்தியம்மா ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.

    மாலை 6.30 மணியளவில் முப்பெரும்தேவி அம்மனுக்கு பச்சை அரிசி மாவு, பன்னீர், மஞ்சள், இளநீர், பழங்கள், திருநீர், தயிர், குங்குமம், தேன், சந்தனம், நறுமணப் பொருள்கள் உள்பட 18 வகையான அபிஷேகங்களும், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் பிரார்த்தனைகள் நடைபெற்றது.

    பின்னர் 1008 லிட்டரில் சிறப்பு பால் அபிஷேகம் குருநாதர் சக்தியம்மா தலைமையில் நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பாலவிநாயகர், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் பாலபிஷேகம் நடந்தது.

    முப்பெரும்தேவியருக்கு சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரங்கள் செய்து பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×