திருட்டு குற்றங்களை தடுக்க அடிக்கடி வாகன சோதனை

ஜேடர்பாளையம் ஆகிய 5 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மர்ம நபர்கள் இரு சக்கர வாகனங்களை திருடிக் கொண்டு வானங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.இது போன்று வாகன சோதனை நடத்தி னால் திருட்டு குற்றத்தை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருட்டு குற்றங்களை தடுக்க அடிக்கடி வாகன சோதனை
Published on

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பரமத்தி, நல்லூர்,வேல கவுண்டன்பட்டி,

ஜேடர்பாளையம் ஆகிய 5 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மர்ம நபர்கள் இரு சக்கர வாக னங்களை திருடிக் கொண்டு வானங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரம் செய்வது போல் வரும் மர்ம நபர்கள் அப்பகுதியில் பூட்டி இருக்கும் வீடுகள், தனியாக பெண்கள் இருக்கும் வீடுகள், தனியாக வாகனம் நிறுத்தப்படும் இடங்கள், வீடுகளில் தனி நபர்கள் இருப்பது ,வெளியூர்களுக்கு சென்றவர்களின் வீடுகள் போன்றவற்றை கண்கா ணித்து அப்பகுதியில் யாரும் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து திருடி செல்கின்றனர்.

அதேபோல் தனியாக நின்று கொண்டிருக்கும் பெண்களிடமும், நடந்து செல்லும் பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளையும் பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாக னத்தில் சென்று விடுகின்ற னர். இதனால் நகை மற்றும் பணத்தை பறிகொடுத்த வர்கள் பரிதவித்து இருக்கின்றனர்.

இதன் காரணமாக போலீ சார் தனித்தனி குழுக்களாக பிரிந்து முக்கிய பகுதிகளில் நின்று அந்த வழியாக வெளி மாவட்ட பதிவு எண்கள் கொண்ட வாகனத்தில் வரும் நபர்களை தடுத்து நிறுத்தி தீவிர விசாரணை நடத்த வேண்டும். தொடர்ந்து இது போன்று வாகன சோதனை நடத்தி னால் திருட்டு குற்றத்தை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com