பாவூர்சத்திரத்தில் இலவச நீட் பயிற்சி முகாம் தொடக்க விழா

விழாவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் சேவியர் இருதயராஜ் மாணவர்களுக்கு நீட் பயிற்சிக்கு தங்களை எவ்வாறு தயார்படுத்த வேண்டும் என விளக்கமளித்தார்.
நெல்லை தட்சண மாற நாடார் சங்க தலைவரும், பாவூர்சத்திரம் காமராஜர் மார்க்கெட் தலைவருமான ஆர்.கே. காளிதாசன் இலவச நீட் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசிய காட்சி.
நெல்லை தட்சண மாற நாடார் சங்க தலைவரும், பாவூர்சத்திரம் காமராஜர் மார்க்கெட் தலைவருமான ஆர்.கே. காளிதாசன் இலவச நீட் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசிய காட்சி.
Published on

தென்காசி:

பாவூர்சத்திரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் தினசரி காய்கனி மார்க்கெட், ஷாப்பிங் காம்ப்ள்க்ஸ் மற்றும் மதிரா டியூசன் சென்டர் இணைந்து நடத்தும் இலவச நீட் பயிற்சி தொடக்க விழா நேற்று மார்க்கெட் வளாகத்தில் நடைபெற்றது. நீட் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அருள்குமார் வரவேற்று பேசினார்.

இதில் நெல்லை தட்சண மாற நாடார் சங்க தலைவ ரும், பாவூர்சத்திரம் காமரா ஜர் மார்க்கெட் தலைவரு மான ஆர்.கே. காளிதாசன் கலந்து கொண்டு இலவச நீட் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார்.

விழாவில் புல்லுக்காட்டு வலசை அரசு மேல்நிலைப் பள்ளி, பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அயன் குறும்பலாபேரி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பூலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சேவியர் இருதயராஜ் மாணவர்களுக்கு நீட் பயிற்சிக்கு தங்களை எவ்வாறு தயார்படுத்த வேண்டும் என விளக்கமளித்தார். டாக்டர். சுபஜோதிகுமார், கனக சபாபதி, பிரபாகர் ஆகி யோர் நீட் பயிற்சி குறித்து விளக்கம் அளித்தனர்.

விழாவில் அயன் குறும்ப லாபேரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்சிங் கலந்து கொண்டு பேசினார். மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், தொழிலதிபர் கோல்டன் செல்வராஜ், கீழப்பாவூர் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் குமார்பாண்டியன், நாராயண சிங்கம், ஏ.பி. பாலசுப்ரமணியன் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com