சிறுகுடியில் இலவச மருத்துவ முகாம்

நத்தம் அருகே சிறுகுடியில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. பொது மக்களுக்கு சர்க்கரை, உப்பு, இ.சி.ஜி.உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்தனர்.
முகாமில் கலந்து கொண்டவர்கள்.
முகாமில் கலந்து கொண்டவர்கள்.
Published on

நத்தம்:

நத்தம் அருகே சிறுகுடியில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோகிலாவாணி வீரராகவன் தலைமை தாங்கினார். துணை தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார்.

முகாமில் திண்டுக்கல் எம்.எம். சிறுநீரக சர்க்கரை நோய் சிகிச்சை மைய மருத்துவர்கள் பாலமுருகன், அர்ச்சனா ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு சர்க்கரை, உப்பு, இ.சி.ஜி.உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இதைப்போலவே நத்தம் வெள்ளக்குட்டு பகுதியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது. இதில் தொகுதி தலைவர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com