search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜி.தும்மலப்பட்டி ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம்
    X

    முகாமில் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    ஜி.தும்மலப்பட்டி ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம்

    • 15 பேருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான அடையாள தேர்வு அட்டை வழங்கப்பட்டது.
    • ஒருவர் மட்டும் உடனடி அறுவைச் சிகிச்சை செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு ஒன்றியம் ஜி.தும்மலப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தமிழக அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம், சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரியா நடராஜன் தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்தார்.

    துணைத் தலைவர் சங்கரீஸ்வரி கவியரசு முன்னிலை வகித்தார். திண்டுக்கல் டாக்டர் கவுதம் தலைமையில் சிகிச்சை முகாம் நடைபெற்றது. 60 பேருக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 15 பேருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான அடையாள தேர்வு அட்டை வழங்கப்பட்டது. ஒருவர் மட்டும் உடனடி அறுவைச் சிகிச்சை செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

    இம்முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரியா நடராஜன் தலைமையில், துணைத் தலைவர், மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்கள் செய்திருந்தனர். ஊராட்சி மன்ற செயலாளர் சோலைமலை நன்றி கூறினார்.

    Next Story
    ×