search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் சீர்வரிசைகளுடன் 8 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
    X

    8 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை அமைச்சர் இ.பெரியசாமி நடத்தி வைத்தார். இதில் மாவட்ட கலெக்டர் பூங்கொடி, மேயர் இளமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் சீர்வரிசைகளுடன் 8 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

    • இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 8 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்தி வைத்த அமைச்சர் இ.பெரியசாமி.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அபிராமி அம்மன் உடனுறை பத்மகிரீஸ்வரர் கோவிலில் இன்று இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 8 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. திருமணத்தை நடத்தி வைத்த அமைச்சர் இ.பெரியசாமி பேசியதாவது:-

    தமிழக முதல்-அமை ச்சரின் உத்தரவின்படி பொருளா தாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மக்களின் ஜோடிகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் தங்கத்தாலி உட்பட ரூ.50,000 மதிப்பில் சீர் வரிசைகள் வழங்கி திருமண விழா நடத்தப்பட்டு வரு கிறது.

    கடந்த ஆண்டு 500 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தப்பட்டது. தற்போது கூடுதலாக மேலும் 100 ஜோடிகளை சேர்த்து ஒரு மண்டலத்திற்கு 30 ஜோடிகள் வீதம் 600 ஜோடிகளுக்கு திருக்கோயி ல்கள் சார்பாக திருமண விழா நடத்தப்படு கிறது.

    அதன்படி திருமணத்திற்கு தேவையான 4 கிராமில் திருமாங்கல்யம், மணமகன் ஆடை ரூ.1000, மணகள் ஆடை ரூ.2000, திருமண த்திற்கு மணமகன், மணமகள் வீட்டார் 20 நபர்களுக்கு உணவு ரூ.2000, மாலை, புஷ்பம் ரூ.1000, பீரோ ரூ.7800, கட்டில் ரூ.7500, மெத்தை ரூ.2200, இரண்டு தலையணை ரூ.190, ஒரு பாய் ரூ.180, இரண்டு கைக்கடிகாரம் ரூ.1000, ஒரு மிக்சி ரூ.1490, பூஜை பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் ரூ.3640 என மொத்தம் ரூ.30,000 மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் மற்றும் 4 கிராம் தங்கம் ஆகியவை வழங்க ப்பட்டு வருகிறது.

    நடப்பு ஆண்டில் முதற்கட்டமாக திண்டுக்கல் இணை ஆணையர் மண்டலத்திற்குட்பட்ட திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஜோடிகளுக்கும், தேனி மாவட்டத்தில் 5 ஜோடிகளுக்கும் என மொத்தம் 7 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    தற்போது 2-ம் கட்டமாக திண்டுக்கல்அபிராமி அம்மன் கோவிலில் 8 ஜோடிகளுக்கு இன்று இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி நடப்பு ஆண்டில் இதுவரை திண்டுக்கல் இணை ஆணையர் மண்ட லத்தில் மொத்தம் 22 ஜோடி களுக்கு திருக்கோயில்களின் சார்பில் இலவச திருமணம் நடத்தப்ப ட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சிகளில், மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையாளர் சுரேஷ், செயல் அலுவலர்கள் வேலுச்சாமி, முருகன், பாலசரவணன், ராமநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×