பாவூர்சத்திரம் அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்

பாவூர்சத்திரம் ஒளவையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.பள்ளி மாணவிகள் 369 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.
மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கிய காட்சி.
மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கிய காட்சி.
Published on

தென்காசி:

பாவூர்சத்திரம் ஒளவையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன், எம்.எல்.ஏ. பழனி நாடார், தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே. காளிதாசன் ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி மாணவிகள் 369 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சிராணி, கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி, ஒன்றிய செயலாளர் சீனித்துரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com