பலகார சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி

சேலம் மாவட்டம் ஆத்தூர் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பலகார சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்தனர்.100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆத்தூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
பலகார சீட்டு  நடத்தி பல லட்சம் மோசடி
Published on

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர், மாலினி, தம்பதியர். இவர்கள் கடந்த சில வருடங்களாகவே நரசிங்கபுரம், விநாயகபுரம், திருநாவுக்கரசு நகர், தில்லை நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பலகார சீட்டு நடத்துவதாக மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை வசூல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர். இதனால் அவர்களிடம் பணம் கட்டியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களிடம் பணம் வசூல் செய்து கொண்டு மோசடி செய்த 2 பேரிடமிருந்து தங்களுக்கு பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என கூறினார்கள். இதை தொடர்ந்து சம்மந்தப்பட்ட சந்திரசேகர், மாலினி ஆகிய இருவரையும் போலீசார் அழைத்து விசாரித்தனர்.

அப்பொழுது விரைவில் அனைவருக்கும் பணத்தை கொடுத்து விடுவதாக அவர்கள் கூறினர். இதை தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com