search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாயர்புரம் பேரூராட்சியில் 3 புதிய பாலம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா
    X

    பாலம் அமைப்பதற்கான வேலைகள் தொடக்கம் .


    சாயர்புரம் பேரூராட்சியில் 3 புதிய பாலம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா

    • ரூ.10 லட்சம் மதிப்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவையான 2 சிறிய பாலம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • பேரூராட்சி மன்றத் தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமை தாங்கினார்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் பேரூராட்சியில் உள்ள 6 வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.10 லட்சம் மதிப்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவையான 2 சிறிய பாலமும், சோலை புதூர் பகுதியில் புது சுப்பிரமணியபுரம் மயானத்திற்கு செல்லும் வழியில் சிறிய பாலத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்றத் தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் , சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அறவாழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாயர்புரம் வார்டு கவுன்சிலர் முத்துமாரி, சாயர்புரம் பேரூராட்சி மேற்பார்வையாளர் நித்திய கல்யாண் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×