search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊரக உள்ளாட்சி காலி இடங்களுக்கு  வேட்பு மனு தாக்கல்
    X

    ஊரக உள்ளாட்சி காலி இடங்களுக்கு வேட்பு மனு தாக்கல்

    • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஊரக, உள்ளாட்சி காலி இடங்களுக்கு இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
    • முதல் நாளில் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.

    சேலம்:

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் இறப்பு மற்றும் பதவி விலகல் உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரையில் ஏற்பட்ட பதவி இடங்களை நிரப்புவதற்காக தற்செயல் தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் 12 இடங்களுக்கும், நாமக்கல் மாவட்டத்தில் 16 பதவிகளுக்கும் அடுத்த மாதம் (ஜூலை) 9-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    சேலம் மாவட்டத்தில் சேலம் ஊராட்சி ஒன்றியம் 8-வது வார்டு உறுப்பினர் பதவி மற்றும் மின்னாம்பள்ளி, பூவனூர், நடுப்பட்டி, கூணான்டியூர், பொட்டனேரி, தெத்திகிரிப்பட்டி, புள்ளாக்கவுண்டம்பட்டி, தேவியாக்குறிச்சி, கிழக்கு ராஜாபாளையம், எலவம்பட்டி, நீர்முள்ளிக்குட்டை ஆகிய ஊராட்சிகளில் 11 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் 8-வது வார்டு உறுப்பினர் பதவி, கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக்குழு 4-வது வார்டு உறுப்பினர் பதவி மற்றும் ஆயில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கும், இளநகர் ஊராட்சி 2-வது வார்டு, மாவுரெட்டிபட்டி ஊராட்சி 2-வது வார்டு, வடவத்தூர் ஊராட்சி 2-வது வார்டு, சிறுநல்லிக்கோவில் ஊராட்சி 3-வது வார்டு, ராசிபாளையம் ஊராட்சி 9-வது வார்டு, மத்துருட்டு ஊராட்சி 5-வது வார்டு, ஓடப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சி 3-வது வார்டு, தட்டாங்குட்டை ஊராட்சி 11-வது வார்டு, செருக்கலை ஊராட்சி 9-வது வார்டு, கதிராநல்லூர் ஊராட்சியில் 1-வது வார்டு, மோளப்பாளையம் ஊராட்சி 8-வது வார்டு, கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சி 8-வது வார்டு, சிறு மொளசி ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடக்கிறது.

    இதற்காக இன்று (திங்கட்கிழமை) வேட்புமனு தாக்கல் தொடங்கியது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படுகிறது. வருகிற 27-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 28-ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். 30-ந் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெறலாம். முதல் நாளில் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.

    அடுத்த மாதம் 12-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது. வருகிற 14-ந் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×