search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்விரோத தகராறில் பூ வியாபாரி வெட்டிக்கொலை; இருவர் கைது- பரபரப்பு
    X

    கொலையுண்ட காத்தாடி ராஜா மற்றும் கைது செய்யப்பட்டவர்கள்.

    முன்விரோத தகராறில் பூ வியாபாரி வெட்டிக்கொலை; இருவர் கைது- பரபரப்பு

    • பட்டுக்கோட்டை பெரிய தெரு தனியார் வங்கி அருகில் பூக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.
    • சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திலேயே கார்த்தி, வீரமணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சுண்ணா ம்புக்கார தெருவை சேர்ந்தவர் காத்தாடி ராஜா (வயது 52) பூ வியாபாரி . இவர் பட்டுக்கோட்டை பெரிய தெரு தனியார் வங்கி அருகில் பூக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். மேலும் இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்தி (37), வீரமணி (27) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் இன்று காலை தலைமை தபால் நிலையம் எதிரே உள்ள தனியார் மண்டபம் அருகே ராஜா நின்று கொண்டிருந்தார். அங்கு காலை நேரம் என்பதால் ஏராளமான பொதுமக்களும் நின்றிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த கார்த்தி, வீரமணி முன்விரோதத்தை மனதில் கொண்டு ராஜாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி கார்த்தி, வீரமணி ஆத்திரம் அடைந்து அரிவாளால் காத்தாடி ராஜாவை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த காத்தாடி ராஜா சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காத்தாடி ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த 1 மணி நேரத்திலேயே கார்த்தி, வீரமணியை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டப்பகலில் பொதுமக்கள் அதிகம் கூடிய இடத்தில் நடந்த இந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×