தேயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயம்

மத்திய மந்திரி உடன் விவசாயிகள் சந்திப்பு அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி
தேயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயம்
Published on

ஊட்டி,

அண்ணாமலை பாதயாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி பியூஸ்கோயல் வந்திருந்தார்.அப்போது அவரை நாக்குபெட்டா நலசங்க தலைவர்கள், தேயிலை தொழிற்சாலை உரிமையாளர் சங்கத்தினர் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.தொடர்ந்து நீலகிரி தேயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.

விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை படித்து பார்த்த பியூஸ்கோயல், இதுகுறித்து அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.நிகழ்ச்சியில் பா.ஜ.க மாவட்ட தலைவர் மோகன்ராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com