search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமேசுவரத்தில் 3 நாட்களுக்கு பின் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்
    X

    ராமேசுவரத்தில் 3 நாட்களுக்கு பின் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்

    • மீனவர்களின் பாதுகாப்பு கருதி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மறு அறிவிப்பு வரும் வரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தடை விதித்திருந்தது.
    • 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    ராமேசுவரம்:

    வங்க கடலில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறை காற்று காரணமாக மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் காற்றின் வேகம் குறைந்த நிலையில் இன்று காலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

    வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைகாற்று வீசக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இதனால் கடந்த 28-ந்தேதி முதல் மீனவர்களின் பாதுகாப்பு கருதி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மறு அறிவிப்பு வரும் வரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தடை விதித்திருந்தது.

    இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    இந்த நிலையில், வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காற்றின் வேகம் குறைந்த நிலையில் இன்று ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி அளித்ததை தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    Next Story
    ×