மாமல்லபுரத்தில் காலநிலை மாற்றத்தால் கடலில் மீன் வரத்து குறைந்தது

வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் முகப்பு விளக்கை எரிய விட்டு செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் காலையில் கடுங்குளிரையும், மதியம் சுடும் வெயிலையும் அனுபவித்து வருகின்றனர்.
மாமல்லபுரத்தில் காலநிலை மாற்றத்தால் கடலில் மீன் வரத்து குறைந்தது
Published on

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் கடந்த 3 நாட்களாக காலையில் பனி மூட்டத்துடன் மழை பெய்வது போன்று பனித்துளி பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் முகப்பு விளக்கை எரிய விட்டு செல்கின்றனர்.

மதியம் ஆனதும் வழக்கம் போல் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் காலையில் கடுங்குளிரையும், மதியம் சுடும் வெயிலையும் அனுபவித்து வருகின்றனர்.

இந்த காலநிலை மாற்றத்தால் மாமல்லபுரம் பகுதி மீனவர்கள் அதிகாலையில் கடலுக்கு செல்ல சிரமமாக உள்ளதாகவும், மீன்களின் வரத்தும் கடலில் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com