search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூக்குப்போட்டு பெண் தற்கொலை
    X

    தூக்குப்போட்டு பெண் தற்கொலை

    • ராம்குமார் கடந்த 8 மாதங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
    • கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த பாட்டி ராஜலட்சுமி கதவை திறக்க முயன்றுள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி ஊராட்சி சன்னதி தெருவை சேர்ந்தவர் ராம்குமார் மனைவி விவேதா (வயது 20). இருவருக்கும் திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது.

    இவர்களுக்கு நித்தீஸ்வரன் (வயது 1) என்ற ஆண் குழந்தை உள்ளது. ராம்குமார் வெளிநாட்டில் கடந்த 8 மாதங்களாக வேலை பார்த்து வருகிறார். விவேதா மாமனார் ராமலிங்கம், மாமியார் செல்வி, ராமலிங்கத்தின் தாயார் ராஜலட்சுமி ஆகியோருடன் கங்களாஞ்சேரியில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முதல் நாள் காலை 9 மணிக்கு வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்றுள்ளனர்.

    பாட்டி ராஜலட்சுமி மட்டும் வீட்டிலிருந்துள்ளார்.

    விவேதா குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டு அறையில் இருக்கிறார் என நினைத்துக் கொண்டு இருந்துள்ளார்.

    காலை 11 மணி ஆகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த பாட்டி ராஜலட்சுமி கதவை திறக்க முயன்றுள்ளார்.

    பின்னர் வீட்டை விட்டு வெளியே சென்று கத்தி கூச்சலிட்டுள்ளார்.

    அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது விவேதா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கண்ணபுரம் போலீசார் விவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருமணமாகி 2 ஆண்டுகளில் விவேதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதால் உதவி கலெக்டர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    Next Story
    ×