search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி அருகே தந்தை, மகனுக்கு கத்திக்குத்து
    X

    நாங்குநேரி அருகே தந்தை, மகனுக்கு கத்திக்குத்து

    • பொன்னையாவுக்கும், சுடலையாடும் பெருமாளுக்கும் சொத்து பிரிப்பதில் முன் விரோதம் இருந்து வருகிறது.
    • ஆத்திரம் அடைந்த சுடலையாடும் பெருமாள், பொன்னையாவை கத்தியால் குத்தினார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள ஏமன்குளம் புதுக்குளம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னையா (வயது 65) விவசாயி . இவருக்கும் அவரது உறவினரான சுடலையாடும் பெருமாளுக்கும் சொத்து பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று பொன்னையாவும், அவரது மகன் சரவணபெருமாளும் (40) புதுக்குளம் பெருமாள் கோவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த சுடலையாடும் பெரு மாளுக்கும், பொன்னை யாவுக்கும் தகராறு ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த சுடலையாடும் பெருமாள், பொன்னையாவை கத்தியால் குத்தினார்.

    இதனை தடுக்க வந்த அவரது மகன் சரவண பெருமாளையும் கத்தியால் குத்தினார். இதனால் காயம் அடைந்த தந்தை, மகன் இருவரையும், அக்கம், பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கிருந்து பொன்னையா மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து நாங்குநேரி போலீசில் புகார் செய் யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இது தொடர்பாக சுடலையாடும் பெருமாளை தேடி வருகின்றார்.

    Next Story
    ×