search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயிர் காப்பீட்டுக்கு வழிவகை செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
    X

    பயிர் காப்பீட்டுக்கு வழிவகை செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

    • குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்து திட்டத்தின் கீழ் இலவசமாக உரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
    • குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு இதுவரை பயிர் காப்பீடு குறித்த எந்தவித அறிவிப்பும் வெளிவரவில்லை.

    பூதலூர்:

    தமிழக காவிரி பாசனப் பகுதி குறுவை சாகுபடிக்காக நடப்பாண்டு எப்போதும் இல்லாத அளவிற்கு மே மாதம் 24 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது.மேட்டூர் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்த நிலையில், காவிரி பாசனப் பகுதிகளில் குறுவை சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என்று வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    அதேபோல பாசனப்ப குதிகளில் அவ்வப்போது பெய்த மழையாலும், கால்வாய்களில் தண்ணீர் வரத்து சீராக இருந்ததாலும் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு குறுவைசாகுபடி நிறைவடையும் தருவாயில் உள்ளது.

    தஞ்சை மாவட்ட த்தில் குறுவை சாகுபடி இலக்கை தாண்டி 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

    மேலும் கூடுதலாக சாகுபடி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.குறுவை சாகுபடி ஊக்குவிப்பதற்காக குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்து திட்டத்தின் கீழ் இலவசமாக உரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இதற்காக குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர் சாகுபடி குறித்த விவரங்களை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று வேளாண் துறை மூலமாக கூட்டுறவு சங்கத்தி லிருந்து உரங்களை பெற்று செல்கின்றனர்.அதே சமயத்தில் குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு திட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப் படவில்லை.

    கடந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் பூச்சி தாக்குதல், பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்டு இழப்பீடு பெற இயலாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்காலம் தப்பி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு தமிழகஅரசு அறிவித்திருந்த நிவார ணமும் முழுமையாக கிடைக்கவில்லை என்று விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்த நிலையில் நடப்பாண்டு குறுவை சாகுபடி செய்துள்ள விவசா யிகளுக்கு இதுவரை பயிர் காப்பீடு குறித்த எந்தவித அறிவிப்பும் வெளி வரவில்லை.

    அண்மையில் தஞ்சையில் காட்டு தோட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த வேளாண் துறை இயக்குனர் அண்ணாதுரை குறுவை சாகுபடி பயிர் காப்பீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறிவிட்டு சென்றார்.

    அது குறித்துஅறிவிப்பு ஏதும் இன்னும் வெளியாக வில்லை.இதனால் தஞ்சை மாவட்ட விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தற்போதுள்ள பருவநிலை மாற்றத்தால் குறுவை சாகுபடியில் பூச்சி தாக்குதல், அறுவடை காலத்தில் இழப்பு ஏற்படும் என்ற சூழ்நிலையில் தமிழக அரசே மத்திய அரசுடன் போராடி குறுவை சாகுபடிக்கான இன்சூரன்ஸ் திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

    இன்சூரன்ஸ்திட்டத்தில் கடைசி தேதிக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க தமிழக வேளாண் துறையும், தமிழக அரசும் விரைந்து செயல்பட்டு குறுவைப் பயிர்களுக்கு பயிர் காப்பீடு அறிவிப்பினை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட குறுவை சாகுபடி விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

    Next Story
    ×