search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடமதுரை, அய்யலூர் பகுதியில் கால்நடை ஆஸ்பத்திரிக்கு முறையாக வராத டாக்டர்கள் - விவசாயிகள் தவிப்பு
    X

    கோப்பு படம்

    வடமதுரை, அய்யலூர் பகுதியில் கால்நடை ஆஸ்பத்திரிக்கு முறையாக வராத டாக்டர்கள் - விவசாயிகள் தவிப்பு

    • காலை நேரங்களில் டாக்ட ர்கள் சரியான நேரத்திற்கு வருவது இல்லை. மேலும் முறையாக பதில் அளிக்காத தால் விவசாயிகள் தவிப்பு க்குள்ளாகி வருகின்றனர்.
    • எனவே விவசாயிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் கால்நடை ஆஸ்பத்திரி களுக்கு டாக்டர்கள் முறையாக வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வடமதுரை:

    வடமதுரை, அய்யலூர், பாடியூர், பாகாநத்தம், தென்னம்பட்டி, காண ப்பாடி, புத்தூர், எரியோடு, குஜிலியம்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடை ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இப்பகுதியில் பெரும்பாலும் விவசாயி களே அதிகம் உள்ளதால் கால்நடை வளர்ப்பு அதிகள வில் நடைபெற்று வருகிறது.

    இந்த கால்நடைகளுக்கு பரிசோதனை மற்றும் மருத்துவம் பார்க்க கால்நடை ஆஸ்பத்திரிக்கு செல்கின்றனர். ஆனால் காலை நேரங்களில் டாக்ட ர்கள் சரியான நேரத்திற்கு வருவது இல்லை. மேலும் முறையாக பதில் அளிக்காத தால் விவசாயிகள் தவிப்பு க்குள்ளாகி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இதனை தட்டிக்கேட்ட விவசாயியை கால்நடை டாக்டர் மற்றும் அவரது உதவியாளர் தரக்குறைவாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைர லாகி வருகிறது. எனவே விவசாயிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் கால்நடை ஆஸ்பத்திரி களுக்கு டாக்டர்கள் முறையாக வரவேண்டும். கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×