கோவை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்

கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்களின் உடைமைகளை சோதனை செய்து அனுப்பி வைத்தனர்தென்னை மரங்களை வெட்ட வேண்டும் என்று மரங்களில் அம்புக்குறியிட்டு சென்றுள்ளனர்.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்
Published on

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதனால் அலுவலக வாசல் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்களின் உடைமைகளை சோதனை செய்து அனுப்பி வைத்தனர். கலெக்டர் கிராந்திகுமார் பாடி மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக வாழைத்தார், தென்னை குருத்து, மட்டை ஆகிய பொருட்களுடன் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது:- கோவை மாவட்டம் இருகூர் பேரூராட்சியில் விவசாயம் செய்து வரும் நிலத்திற்கு அருகில் சில தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் இடத்தை வாங்கி வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்ய முயற்சித்து வருகின்றனர். அதற்காக 30 அடி உள்ள சாலையை விரிவுபடுத்த முடிவு செய்து விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சி நடந்து முடிகிறது. இதற்காக தென்னை மரங்களை வெட்ட வேண்டும் என்று மரங்களில் அம்புக்குறியிட்டு சென்றுள்ளனர். எனவே கோரிக்கையே இல்லாமல் சாலையை விரிவுபடுத்த தன்னிச்சையாக முயற்சிக்கும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுவை கலெக்டரிடம் அளித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com