search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியாறு அணையில் 1000 கன அடி நீர் திறக்க விவசாயிகள் எதிர்ப்பு
    X

    முல்லைபெரியாறு அணை (கோப்பு படம்)

    பெரியாறு அணையில் 1000 கன அடி நீர் திறக்க விவசாயிகள் எதிர்ப்பு

    • கேரள அரசு மற்றும் சில தன்னார்வலர்கள் அணை பலம் இழந்துவிட்டதாக வதந்தி பரப்பி வருகின்றனர்.மேலும் அணையின் நீர்மட்டத்தை உயர விடாமல் சதி செய்து வருகின்றனர்.
    • முல்லை ப்பெரியாற்று கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.

    152 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது. ஆனால் கேரள அரசு மற்றும் சில தன்னார்வலர்கள் அணை பலம் இழந்துவிட்டதாக வதந்தி பரப்பி வருகின்றனர்.மேலும் அணையின் நீர்மட்டத்தை உயர விடாமல் சதி செய்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 133.75 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 5575 மி.கன அடியாகும். தற்போது மழை ஓய்ந்த நிலையில் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 105 கன அடியில் இருந்து 1000 கன அடியாக அதிகரிக்க ப்பட்டது.

    இதனால் வீரபாண்டி வரை உள்ள முல்லை ப்பெரியாற்று கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்ப ட்டுள்ளது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் கூறு கையில், கம்பம் பள்ள த்தாக்கு பாசனத்திற்கு போதுமான அளவு நீர் இருப்பு உள்ளது. வைகை அணையும் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. தற்போது தண்ணீர் தேவை இல்லாத நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 1000 கன அடி நீர் திறக்கப்படுவது தேைவயற்றது. ரூல்கர்வ் விதிப்படி வருகிற 30ந் தேதி வரை 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம். குறைந்தபட்சம் 136 அடி நீர்மட்டத்தை நிலை நிறுத்தி இருக்க வேண்டும். எனவே நீர் திறப்பை குறைக்க வேண்டும் என்றார்.

    அணையில் இருந்து 1000 கனஅடி நீர் திறக்கப்படுவ தால் லோயர்கேம்ப் பெரி யாறு நீர் மின் நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் மூலம் 90 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது. அணைக்கு 1146 கன அடி நீர் வருகிறது.

    கூடுதல் தண்ணீர் திறப்பு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. எனவே அதனை ஈடுகட்டவே பெரியாறு அணையில் 1000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது என்ற னர்.

    வைகை அணையின் நீர்மட்டம் 67.98 அடியாக உள்ளது. 892 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்தி ற்காக 2099 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்ச ளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணை யின் நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. 83 கன அடி நீர் வருகிறது. அது முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    Next Story
    ×