search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனியில்  ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மாயம்
    X

    கோப்பு படம்

    தேனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மாயம்

    • தேனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மாயமாகினர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்

    தேனி:

    தேனி ஜீவானந்தம் நகர், எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் அழகர்(52). அவரது மனைவி பரமேஸ்வரி(42), மகன் அழகுராஜா(26). இவர்கள் 3 பேரும் பரமேஸ்வரியின் சகோதரி தனலட்சுமி என்பவருடன் ஆண்டிபட்டியிலிருந்து தேனி புதிய பஸ்நிலையத்திற்கு பஸ்சில் வந்தனர்.

    அங்கு தனலட்சுமி அவர்களை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது தனலட்சுமிைய செல்லுமாறும், பின்னால் வருவதாகவும் கூறியுள்ளனர். ஆனால் வெகுநேரமாகியும் 3 பேரும் வரவில்லை.

    அவர்கள் செல்போனுக்கு அழைப்பு விடுத்தபோது அது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×