search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவர்களை மிரட்டி நகை பணம் பறிப்பு
    X

    கல்லூரி மாணவர்களை மிரட்டி நகை பணம் பறிப்பு

    • 7 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    • நண்பர்கள் 12 பேருடன் அம்பாள் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்த கல்லூரிக்கு சென்று வந்தார்.

    கோவை,

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் சர்வேஷ்குமார் (வயது 21). இவர் மலுமிச்சம்பட்டியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தனது நண்பர்கள் 12 பேருடன் அம்பாள் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்த கல்லூரிக்கு சென்று வந்தார்.

    சம்பவத்தன்று அதிகாலை 3 மணியளவில் சர்வேஷ்குமார் தங்கி இருந்த வீட்டிற்குள் 7 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி உள்ளே நுழைந்தனர்.

    அவர்கள் அறையில் தூங்கி கொண்டு இருந்தவர்களை எழுப்பினர்.

    பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் அணிந்து இருந்த செயின், மோதிரம், வெள்ளி செயின் ஆகியவற்றை பறித்தனர். மேலும் ரூ.25 ஆயிரம் ரொக்க பணம், 5 லேப்டாப், 4 வாட்ச் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இதில் அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்த வீட்டிற்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி செயின், மோதிரம், பணம் உள்பட ரூ.1½ லட்சம் மதிப்பிலான பொருட்களை பறித்து சென்ற 7 பேர் கொண்ட கும்பலை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×