search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் சிறுபான்மையினர் பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
    X

    தென்காசி மாவட்டத்தில் சிறுபான்மையினர் பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

    • தென்காசி மாவட்ட பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையினர் மாணவர்கள் உதவி தொகை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • இது வரையில் விண்ணப்பிக்காத சிறுபான்மையின மாணவர்கள் கால அவகாசத்தை பயன்படுத்தி வருகிற 15-ந் தேதிக்குள் தவறாமல் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் சிறுபான்மையினர் மாணவ, மாணவிகளுக்கான பள்ளிப்படிப்பு கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க கால அவகாசம் 15- ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    எனவே இது வரையில் விண்ணப்பிக்காத சிறுபான்மை யின மாணவ, மாணவிகள் கால அவகாசத்தை பயன்படுத்தி வருகிற 15-ந் தேதிக்குள் தவறாமல் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×