search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் 6- 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு
    X

    பள்ளி மாணவியர்

    தமிழகத்தில் 6- 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு

    • 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 5-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
    • இந்நிலையில், தமிழகத்தில் 6- 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வுகள் முடிந்ததும் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்படி, 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 9-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அக்டோபர் 6 முதல் 8-ம் தேதி வரை எண்ணும் எழுத்தும் பயிற்சி நடத்தவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது.

    இதற்கிடையே, தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 5-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 9-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×