search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிக்கான தேர்வு- 2,122 பேர் தேர்வு எழுதவில்லை
    X

    நெல்லை டவுண் சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதியவர்களை படத்தில் காணலாம். 

    நெல்லை ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிக்கான தேர்வு- 2,122 பேர் தேர்வு எழுதவில்லை

    • 12 இடங்களில் 14 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • தேர்வு எழுதுவதற்காக ஆயிரத்து 852 பேர் மட்டுமே வந்திருந்தனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வு நெல்லை மாவட்டத்தில் இன்று நடைபெற்றது.

    இதற்காக மாவட்டத்தில் 12 இடங்களில் 14 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த தேர்வுக்காக மொத்தம் 3 ஆயிரத்து 974 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் ஆயிரத்து 852 பேர் மட்டுமே தேர்வெழுத வந்திருந்தனர். 2 ஆயிரத்து 122 பேர் தேர்வு எழுத வரவில்லை.

    Next Story
    ×