விபத்தில் வாலிபர் பலி

ஆப்பக்கூடல் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஆப்பக்கூடல்:

ஆப்பக்கூடல் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆப்பக்கூடல் அருகே உள்ள ஓசைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருணாசலம் (22). இவர் அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். 

சம்பவத்தன்று அருணாசலம் தனது மோட்டார்சைக்கிளில் ஆப்பக்கூடலில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி அத்தாணி கைகாட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது அருணாசலம் திடீரென எதிரே வந்த வாகனத்தை கவனிக்காமல் பிரேக் அடித்தார். இதில் அவர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். 

உடனே  அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே அருணாசலம் இறந்து விட்டதாக கூறினார். இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com