11 எரி சாராய பாட்டில்கள் பறிமுதல்

ஒரு பையுடன் நின்று கொண்டு இருந்தார்.அவர் போட்டு சென்ற பையை சோதனை நடத்தினர்.
11 எரி சாராய பாட்டில்கள் பறிமுதல்
Published on

பவானி, 

பவானி அருகே உள்ள லட்சுமி நகர் கோண வாய்க்கால் பகுதியில் ஈரோடு ரோட்டில் சித்தோடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் ஒருவர் ஒரு பையுடன் நின்று கொண்டு இருந்தார். அவர் போலீசாரை கண்டதும் அந்த பையை அங்கேயே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். இதையடுத்து போலீசார் அவர் போட்டு சென்ற பையை சோதனை நடத்தினர்.

இதில் ஒரு லிட்டர் கேனில் 11 பிளாஸ்டிக் பாட்டில்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எரி சாராயம் இருப்பது கண்டறி யப்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த 11 சாராய பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து போலீசார் தப்பி ஓடியவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பவானி லட்சுமி நகர் அருகே உள்ள கோண வாய்க்கால் ஒய்யாங்காடு பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பது தெரிய வந்துள்ளது. ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார்.

இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை வலை வீசி தேடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com