search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் மாயம்-கணவர் போலீசில் புகார்
    X

    இளம்பெண் மாயம்-கணவர் போலீசில் புகார்

    • பெற்றோர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச்சென்ற ஷபானா திடீரென்று மாயமானார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கோபி ராஜாஜி வீதியை சேர்ந்தவர் சவுக்கத்அலி(25). இவரது மனைவி ஷபானா(23). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணமானது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோபி ஜெய்துர்கை நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச்சென்ற ஷபானா திடீரென்று மாயமானார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்காததால் கோபி போலீசில் கணவர் சவுக்கத்அலி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×