search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலி
    X

    மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலி

    • மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியது.
    • இதில் முருகானந்தம் பலத்த காயமடைந்தார்.

    பெருந்துறை:

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 45). தொழிலாளி. இவர் பெருந்துறை சிப்காட்டிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு அருகிலுள்ள சரளை என்ற இடத்தில் தங்கி இருந்தார்.

    சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து, அவர் தங்கி இருந்த இடத்திற்கு நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியது. இதில் முருகானந்தம் பலத்த காயமடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி முருகானந்தம் உயிரிழந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×