search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாம்பு கடித்து பெண் சாவு
    X

    பாம்பு கடித்து பெண் சாவு

    • கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று சித்ராவை கடித்துள்ளது.
    • பரிசோதித்த மருத்துவர்கள் சித்ரா வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என தெரிவித்தனர்.

    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் சிவகி ரியை அடுத்த வாழை த்தோட்டம் காரவலசையை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 44). கூலித்தொ ழிலாளி. இவரது மனைவி சித்ரா (42). இவர் சம்பவ த்தன்று காரவலசில் உள்ள விவசாயி ஒருவரின் கரும்பு தோட்டத்திற்கு கூலிவே லைக்கு சென்றுள்ளார்.

    அப்போது சித்ரா வேலை பார்த்து கொண்டிருக்கும் போது கரும்புத்தோட்டத்தில் இருந்த கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று சித்ராவை கடித்துள்ளது.

    இதனையடுத்து சித்ராவுடன் வேலை செய்துகொண்டிருந்த அவரது சகோதரி ராசாத்தி என்பவர் சித்ராவை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோ ட்டில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு அழை த்து சென்றுள்ளார்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சித்ரா வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என தெரிவித்தனர்.

    பின்னர் இந்த சம்பவம் குறித்து சித்ராவின் கணவர் மாணிக்கம் சிவகிரி போலீ சாரிடம் புகார் அளித்து ள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×