search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அந்தியூர், பர்கூர் வழியாக கர்நாடகா செல்லும் வாகனங்கள் தீவிர கண்காணிப்பு
    X

    அந்தியூர், பர்கூர் வழியாக கர்நாடகா செல்லும் வாகனங்கள் தீவிர கண்காணிப்பு

    • அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • சோதனைச்சாவடி பகுதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று வருகிறது.

    அந்தியூர்:

    கர்நாடகா சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (மே) 10-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அங்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. மேலும் அரசியல் கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனைசாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அதே போல் தமிழக- கர்நாடகா மாநில எல்லை பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைத்து அந்த வழியாக வரும் வாகனங்களை தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கிறார்கள்.

    இதே போல் ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி, பண்ணாரி மற்றும் அந்தியூர் அடுத்த பர்கூர் வழியாக கர்நாடகா மாநில எல்லை பகுதியில் சோதனைச் சாவடிகள் உள்ளது. இந்த வழியாக வாகனங்களை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் லாரி, பஸ், வேன், சரக்கு வாகனங்கள், 2 சக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த நிலையில் கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தலையொட்டி அந்தியூர் அருகே தாமரைக்கரை, பர்கூர், கர்கேகண்டி வழியாக தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான நால்ரோடை அடுத்து கூடலூர், மாட்டலி, ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்தியூர், பர்கூர் வழியாக கர்நாடகாவுக்கு செல்லும் வாகனங்கள் எல்லை பகுதியில் தீவிர வாகன சோதனைக்கு பிறகே கர்நாடகாவிற்குள் செல்ல அனுமதிக்கபட்டு வருகின்றது. இதனால் கர்நாடகா சோதனைச்சாவடி பகுதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது.

    Next Story
    ×