search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி பெண் பலி
    X

    மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி பெண் பலி

    • இருசக்கர வாகனம் மீது வேன் எதிர்பாராத விதமாக மோதியது.
    • பூங்கொடி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    டி.என்.பாளையம்:

    கோபி அருகே உள்ள கூகலூர் கிரீன் நகரை சேர்ந்தவர் மணி (வயது 55). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி (50).

    இன்று காலை மணி தனது மனைவியுடன் டி.என்.பாளையம் அருகே உள்ள வாணிப்புத்தூருக்கு வேலைக்காக இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார். பூங்கொடி இரு சக்கர வாகனத்தின் பின் பகுதியில் அமர்ந்து வந்தார்.

    இதை தொடர்ந்து அவர்கள் டி.என்.பாளையம் கொன்னகொடிக்கால் என்ற பகுதியில் சென்றனர். அப்போது அங்கு ஒரு தனியார் நிறுவனத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் பின்னால் சென்றது.

    அந்த வேனை கூகலூர் அருகே உள்ள தாழைக்கொம்புதூர் கொன்னமடையை சேர்ந்த இளையகுமார் (30) ஓட்டினார். திடீரென மணி மற்றும் அவரது மனைவி பூங்கொடி சென்று கொண்டு இருந்த இருசக்கர வாகனம் மீது வேன் எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மணியின் மனைவி பூங்கொடி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மேலும் தூக்கி வீசப்பட்ட மணி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். காயம் அடைந்த மணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்பு லன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    டி.என்.பாளையம் அருகே இன்று காலை கணவர் கண் முன்னே மனைவி விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×