விடிய, விடிய நடந்த ேபாலீஸ் சோதனையால் பரபரப்பு

கொள்ளை உள்ளிட்ட குற்றங்களை தடுக்கவும் போலீசாருக்கு உத்தரவிட்டார். போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை தீவிர மாக கண்காணிக்க வேண்டும்.
விடிய, விடிய நடந்த ேபாலீஸ் சோதனையால் பரபரப்பு
Published on

பு.புளியம்பட்டி, 

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஜவகர் பதவி ஏற்ற பின் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த உத்தர விட்டார்.

மேலும் கஞ்சா, கள்ளச்சா ராயம், லாட்டரி சீட்டு, குட்கா மற்றும் ரவுடிகள் செயல்பாடு போன்ற சட்ட விரோத செயல்களை ஒழிக்கவும், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற ங்களை தடுக்கவும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதேபோல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை தீவிர மாக கண்காணிக்க வேண்டும். மற்றும் பொது மக்கள் புகார் மற்றும் அவர்களது பிரச்சினைகள் குறித்து உடனடியாக நடவடி க்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து புளிய ம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் சப்-இன்ஸ்பெ்கடர் ரபி மற்றும் போலீசார் நேற்று இரவு பவானிசாகர் ரோடு, கோவை சாலை, நால்ரோடு சோதனை சாவடி, நம்பியூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைத்து இரவு நேர வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வாகன ங்களின் ஆர்.சி. புத்தகம், இன்சூரன்ஸ் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்த்தும் மற்றும் வாகனங்களையும் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com