search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நொய்யல் ஆற்று தண்ணீரில் உப்பு தன்மை குறைந்தது
    X

    நொய்யல் ஆற்று தண்ணீரில் உப்பு தன்மை குறைந்தது

    • நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகள் இல்லாமல் தண்ணீர் செல்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • திருப்பூர் பகுதி சாய தொழிற்சாலை கழிவு நீர் கலக்காமல் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றில் குறுக்கே உள்ளது ஒரத்துப்பாளையம் அணை. இந்த அணைக்கு வரும் தண்ணீரில் திருப்பூர் பகுதியில் செயல்படும் சாயத் தொழிற்சாலைகளில் இருந்து சாயக்கழிவுகள் அதிக அளவில் கலந்து வந்ததால் ஒரத்துப்பாளையம் அணை முற்றிலும் மாசுபட்டது.

    இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதன் பேரில், அணைக்கு வரும் தண்ணீரில் சாயக்கழிவின் அளவு ஜீரோ டிஸ்சார்ஜாக இருக்கும் வரை அணையில் தண்ணீரை தேக்கி வைக்காமல் முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    அதன்படி பல வருடங்களாக ஒரத்து ப்பாளையம் அணையில் தண்ணீரை தேக்கி வை க்காமல் அப்ப டியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஆனால், மழைக் காலங்களில் திருப்பூர் பகுதியில் இருந்து மழை நீரோடு சாக்கடை கழிவுகள் கலந்து வந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    ஆனால், கடந்த 8-ந் தேதி வெள்ள நீர் வர தொடங்கி அதிகரித்து வந்ததால் சாயக்கழிவுகள் கலந்த தண்ணீராக நொய்யல் ஆற்றில் ஓடியது. அப்போது உப்பு தன்மை 1,900 டி.டி.எஸ். என்ற அளவில் இருந்தது இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஆனால், தொடர்ந்து அதிக படியான வெள்ள பெருக்கு அதிகரித்து தற்போது ஒரத்துப்பாளையம் அணையில் 20 அடி தண்ணீர் தேங்கியது. அணையில் இருந்து 1,505 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    தற்போது அணையில் இருந்து வெளியேறும் நீரில் கருமை நிறம் இல்லாமல் நல்ல தண்ணீராக ஓடுகிறது. நேற்று மாலை நொய்யல் ஆற்று தண்ணீரில் உப்பு தன்மை 250 டி.டி.எஸ்., சாக குறைந்துள்ளது.

    தற்போது நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகள் இல்லாமல் தண்ணீர் செல்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இது குறித்து ஆற்றங்கரையோர விவசாயிகள் கூறுகையில், நல்ல தண்ணீராக நொய்யல் ஆற்றில் செல்கிறது. இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம்.

    இதேபோல் திருப்பூர் பகுதி சாய தொழிற்சாலை கழிவு நீர் கலக்காமல் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். ஆற்றில் கருப்பு நிறம் நீங்கி தண்ணீர் செல்கிறது.

    உப்பு தன்மையும் குறைந்து விட்டது இனி இந்த தண்ணீர் கால்நடைகளுக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தாலம் என்றனர்.

    Next Story
    ×