search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோபி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
    X

    கோபி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

    • காதல் ஜோடியினர் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
    • போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    கோபி:

    திருப்பூர் மாவட்டம் முத்தூ ரை சேர்ந்தவர் அங்கு ராஜ். இவருடைய மகள் சுபாஷினி (21). விஜயமங்க லத்தை சேர்ந்தவர் பஞ்சு ராஜ். இவரது மகன் யஸ்வந்த்ராஜ். இவரும் சுபாஷினி ஆகிய இருவரும் காங்கே யத்தில் உள்ள வெவ்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகிறார் கள்.

    இந்த நிலையில் அவர்கள் காங்கேயம் வந்து சென்ற போது அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டது. இது அவர்களுக்குள் காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இது குறித்து அவர்களின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் காதல் ஜோடியினர் யஸ்வந்த் ராஜ், சுபாஷினி ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறி கோபி செட்டிபாளைய த்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதை தொடர்ந்து அவர்கள் கோபிசெட்டி பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரின் பெற்றோரையும் போலீஸ் நிலையத்துக்கு வரவ ழைத்து பேசினர். இதில் யஸ்வந்த் ராஜ் வீட்டில் அவரது திரு மணத்தை ஏற்று கொண்ட னர்.

    இதையடுத்து காதல் ஜோடியை அவர்களுடன் போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×