search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 57 ஆக உயர்வு
    X

    கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 57 ஆக உயர்வு

    • தொடர்ந்து 3-வது நாளாக கொரோனா தினசரி பாதிப்பு 9 பேருக்கு பதிவாகி வந்துள்ளது.
    • இதுவரை 734 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டிய ல்படி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் தொடர்ந்து 3-வது நாளாக கொரோனா தினசரி பாதிப்பு 9 பேருக்கு பதிவாகி வந்துள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்க ப்பட்டுள்ள வர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 806 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 3 பேர் பாதிப்பிலிருந்து குண மடைந்து நேற்று வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 36 ஆயிரத்து 016 பேர் கொரோனா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    கொரோனா பாதிக்கப்பட்டு இதுவரை 734 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன் தினம் வரை மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிக்கப்ப ட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்த நிலையில் கொரோனா பாதிக்கப்ப ட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 57-ஐ எட்டியது.

    நாளொன்றுக்கு 100 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொ ள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×