search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது
    X

    குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது

    • திடீரென குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது.
    • இதில் மூதாட்டி சுந்தராம்பாள் அதிர்ஷ்ட வசமாக காயம் இன்றி உயிர் தப்பினார்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி அடுத்த சாவடிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தராம்பாள் (85).

    இவரது கணவர் பொன்னுசாமி, மகன் மணி, மகள் லட்சுமி ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டனர். இவரது மருமகள் பூவாய் நாமக்கல் மாவட்டம் வேலூரில் வசித்து வரு கிறார்.

    இந்நிலையில் சுந்தராம்பாள் சாவடிபாளையம் பகுதியில் தனியாக குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் இரவு சுந்தராம்பாள் இரவில் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டில் இருந்த சுந்தரா ம்பாளை மீட்டனர். இதையடுத்து தீயணைப்பு நிலையத்தக்கு தகவல் கொடுத்தனர். மொடக்குறிச்சி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர்.

    இதில் மூதாட்டி சுந்தராம்பாள் அதிர்ஷ்ட வசமாக காயம் இன்றி உயிர் தப்பினார். இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×