தவறி விழுந்து வாலிபர் படுகாயம்

சங்கராபாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி பறித்து போட்டு இருந்த கற்களால் கீழே விழுந்தார்.இதில் அவருக்கு கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
தவறி விழுந்து வாலிபர் படுகாயம்
Published on

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கெட்டி சமுத்திரம் ஏரி கரை பெரு மாள் கோவில் பகுதியில் இருந்து சங்கரா பாளையம் சுமை தாங்கி கல் பகுதி வரை சாலை குண்டும் குழியுமாக இருந்தது. இதை சரி செய்யும் பணி தொடங்கியது. இதையடுத்து குண்டும் குழியுமான ரோடு பறிக்கப்பட்டு இருந்தது.

இதனால் சாலைகளில் ஜல்லி மற்றும் கற்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. கடந்த 3 நாட்களாக பறித்து போடப்பட்டு பணிகள் செய்யாமல் இருப்பதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அந்த கற்கள் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து எழுந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அந்தியூர் அருகே உள்ள சங்கராபாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (25) ஐ.டி கம்பெனியில் பணி புரியும் இவர் தனது இரு சக்கர வாகனத்தில் சங்கரா பாளையத்தில் இருந்து அந்தியூருக்கு வந்து கொண்டி ருந்தார்.

அப்போது சாலையில் ஆங்காங்கே பறித்து போட்டு இருந்த கற்களால் கீழே விழுந்தார். இதில் அவருக்கு கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அந்தியூரில உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் கூறும் போது, இந்த பகுதியில் ரோடு போடும் பணி நடந்து வருகிறது. ஆனால் பல இடங்களில் கற்கள் சிதறி கிடப்பதால் சிறு சிறு விபத்துகள் நடந்து வருகிறது.

எனவே இந்த பணிகளை விரைந்து முடித்து விபத்து க்கள் மேலும் நடை பெறாமல் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கி ன்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com