search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில் மோதி வாலிபர் பலி
    X

    ரெயில் மோதி வாலிபர் பலி

    • வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரம் தெரிய வில்லை.

    ஈரோடு:

    ஈரோடு கே.கே.நகர் அருகே உள்ள தண்ட வாளத்தில் வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அந்த வாலிபர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இறந்த வாலிபருக்கு 30 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரம் தெரிய வில்லை.

    சம்பவ இடத்தில் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்ட வாளத்தை கடந்த போது அடிபட்டு இறந்தது தெரியவந்தது.

    இறந்த நபர் வெள்ளை நிற முழுக்கை சட்டையும், கருப்பு நிற ஜீன்ஸ் பேன்டும் அணிந்திருந்தார்.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×