search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடமாநில தொழிலாளி திடீர் சாவு
    X

    வடமாநில தொழிலாளி திடீர் சாவு

    • மன்னன் காஜு மயக்கம் அடைந்து மயங்கிய நிலையில் இருந்தார்.
    • மயங்கிய நிலையில் இருந்த அவரை சித்தோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றார்.

    பவானி:

    மேற்கு வங்க மாநிலம் பகரா பகுதியை சேர்ந்தவர் நியூர்லிகாஜு. இவரது மகன் மன்னன் காஜு (35). இவருக்கு சம்பா பிபி என்ற மனைவியும், ஹசன் காஜு என்ற மகனும் உள்ளனர்.

    இவர் திருப்பூர் முதலி பாளையம் சிட்கோ மீனாட்சி நகரில் தங்கி மேற்கு வங்கத்தை சேர்ந்த சலா வுதீன் மற்றும் திருப்பூரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி மோகன்ராஜ் என்பவரிடம் கட்டிட வேலை செய்து வந்துள்ளார்.

    இவரின் மனைவி திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் மன்னன் காஜு மற்றும் அவர்களது நண்பர்களான சையது, இன்தாஜில் ஆகிய 3 பேர் சுற்றி பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் பவானி வந்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேர் மீண்டும் மோட்டார் சைக்கிளில் திருப்பூருக்கு சென்று கொண்டு இருந்தனர்.

    அவர்கள் சித்தோடு அருகே சேலம்-கோவை பைபாஸ் ரோட்டில் ஒரு தனியார் ஓட்டல் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென மன்னன் காஜு மயக்கம் அடைந்து மயங்கிய நிலையில் இருந்தார்.

    இதை கண்ட அவருடன் சென்றவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஒரு டீக்கடையில் தண்ணீர், டீ, பிஸ்கட் வாங்கி கொடுத்துள்ளனர்.

    இதையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அவரை சித்தோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×