பவானிசாகர் அணை நிலவரம்

பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.அணைக்கு வினாடிக்கு 1,956 கன அடியாக நீர்வரத்து கொண்டிருக்கிறது.
பவானிசாகர் அணை நிலவரம்
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 74.99 அடியாக உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1,956 கன அடியாக நீர்வரத்து கொண்டிருக்கிறது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1800 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதேப்போல் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 29.81 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 5.90 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.53 அடியாகவும் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com