search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநில அளவில் இடம் பிடித்து சாதனை படைத்த இரட்டையர்கள்
    X

    மாநில அளவில் இடம் பிடித்து சாதனை படைத்த இரட்டையர்கள்

    • கொண்டையம்பாளையம் குட்டையூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. இவரது மகன்கள் ராகுல் மற்றும் கோகுல் 2 பேரும் இரட்டையர்கள் ஆவர்.
    • இந்நிலையில் நடந்து முடிந்த மருத்துவ படிப்பில் சேருவதற்க்கான நீட் நுழைவு தேர்வில் 7.5 ஒதுக்கீட்டில் மாநில அளவில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்துள்ள கொண்டையம்பாளையம் குட்டையூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. இவரது மகன்கள் ராகுல் மற்றும் கோகுல் 2 பேரும் இரட்டையர்கள் ஆவர்.

    இவர்கள் பங்களாப்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துள்ளனர். இந்நிலையில் ராகுல் நடந்து முடிந்த மருத்துவ படிப்பில் சேருவதற்க்கான நீட் நுழைவு தேர்வில் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்ட 7.5 ஒதுக்கீட்டில் 400 மதிப்பெண் பெற்று மாநில அளவில் பொது பிரிவில் 5-வது இடமும், பின் தங்கிய வகுப்பு பிரிவில் 2-ஆம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

    கோகுலும் நடந்து முடிந்த மருத்துவ படிப்பில் சேருவதற்க்கான நீட் நுழைவு தேர்வில் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்ட 7.5 ஒதுக்கீட்டில் 372 மதிப்பெண் பெற்று மாநில அளவில் பொது பிரிவில் 17-வது இடத்தை பிடித்துள்ளார்.

    ராகுல் சென்னை மெடிக்கல் கல்லுாரியிலும், கோகுல் சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லுாரியிலும் சேர்ந்த்துள்ளனர்.

    இவர்கள் 2 பேரும் தங்கள் படித்த பங்களாப்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பெருமை சேர்த்ததால் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜூ உள்பட ஆசிரியர்கள் ராகுல் மற்றும் கோகுல் 2 பேருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    Next Story
    ×