பெருந்துறையில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழாவுக்கு இடம் தேர்வு

முதல் - அமைச்சர் மு. க. ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் நடக்கும் கருணாநிதியின் சிலை திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருக்கிறார்.பெருந்துறை -கோவை ரோட்டில் உள்ள ஏரி கருப்பன் கோவில் பகுதிக்கு அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் சென்று இடத்தை பார்வையிட்டனர்.
பெருந்துறையில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழாவுக்கு இடம் தேர்வு
Published on

பெருந்துறை:

முதல் - அமைச்சர் மு. க. ஸ்டாலின் வருகிற 25, 26-ந் தேதிகளில் ஈரோடு மாவட்டத்தில் நடக்கும் முன்னாள் முதல் - அமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருக்கிறார்.

26-ந் தேதி ஈரோடு சோலாரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 26-ந் தேதி ஈரோடுக்கு பதில் பெருந்துறையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை தேர்வு செய்வதற்காக பெருந்துறை -கோவை ரோட்டில் உள்ள ஏரி கருப்பன் கோவில் பகுதிக்கு அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் சென்று இடத்தை பார்வையிட்டனர்.

தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், பெருந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் சாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் சின்னசாமி, கருமா ண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி தலைவர் செல்வன், துணைத் தலைவர் சக்தி குமார்,

யூனியன் கவுன்சிலர்கள் துடுப்பதி நவபாரதி, செந்தில்குமார் பெருந்துறை பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், திருவாச்சி ஊராட்சி மன்ற தலைவர் சோளி பிரகாஷ், வார்டு கவுன்சிலர்கள் கோகுல், நல்லசிவம், பால விக்னேஷ், சரவணன், சுப்பிரமணியன், ஜெயந்தி வாட்டர் கோபால்,

நந்தினி செல்வகுமார், துரைராஜ், வைகை சுரேஷ், தங்கமுத்து, சதீஷ் பிரவீன் குமார், பழனிசாமி, சுப்பிரமணி, ஒசப்பட்டி பொன்னுச்சாமி, ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள், பேரூர் நிர்வாகிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com