தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குடோனுக்கு சீல்

மாநகராட்சி அதிகாரிகள் பிளாஸ்டிக் குடோனில் ஆய்வு செய்ய நேரில் சென்றனர்.இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அந்த குடோனுக்கு சீல் வைத்தனர்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குடோனுக்கு சீல்
Published on

ஈரோடு:

ஈரோடு மாநகராட்சி 2-வது மண்டலத்தில் உள்ளது கந்தசாமி 2-வது வீதி. இங்குள்ள ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் அந்த குடோனில் ஆய்வு செய்ய நேரில் சென்றனர். அப்போது குடோன் பூட்டப்பட்டிருந்தது.

இதையடுத்து அதிகாரிகள் முன்னிலையில் தான் அந்த குடோனை திறக்க வேண்டும் எனக்கூறி மாநகராட்சி அதிகாரிகள் அந்த குடோனுக்கு சீல் வைத்தனர்.

மேலும் அறிவிப்பை மீறி குடோனை திறந்தால் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற எச்சரிக்கை நோட்டீசும் குடோன் முகப்பில் ஒட்டப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com