வாலிபருக்கு கத்திக்குத்து

பெருந்துறை அருகே முன்விரோத தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து தந்தை-2 மகன்கள் கைது செய்யபட்டனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஈரோடு:

பெருந்துறை அருகே முன்விரோத தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து தந்தை-2 மகன்கள் கைது செய்யபட்டனர்

ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவில் பகுதியை சேர்ந்தவர் செல்வன் (36). அதே பகுதியைச் சேர்ந்தவர் மார்டின் (40). ஏற்கனவே செல்வன், மார்டினை தாக்கியது சம்பந்தமாக இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் மார்டின் மற்றும் அவரது மகன்கள் ஜீவானந்தம் (25), சூரஜ் (21) ஆகிய 3 பேரும் செல்வனை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்ததுடன் கத்தியால் குத்தினர்.

இதையடுத்து செல்வன் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதுகுறித்து காஞ்சிக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், செல்வனை கத்தியால் குத்திய மார்டின், அவரது மகன்கள் ஜீவானந்தம், சூரஜ் ஆகிய 3 பேரையும் காஞ்சிக்கோவில் போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com